அரியலூரில் 15 பேருக்கு கொரோனா

அரியலூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-10 21:35 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 32 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும் நேற்று மருததுவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 211 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 60 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்