பாட்டி இறந்த வேதனையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

கடலூரில் பாட்டி இறந்த வேதனையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-01-11 17:40 GMT
கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பம் சேட்டுநகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் சுமன் (வயது 23). பி.காம். படித்து முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமனின் பாட்டி பாக்கியலட்சுமி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன் பிறகு பாட்டி இறந்த வேதனையில் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிவண்ணன் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு வீட்டு வீட்டில் தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது சுமன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சுமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டி இறந்த வேதனையில் பேரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்