மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை கன்றுக்குட்டி

மர்மமான முறையில் காட்டெருமை கன்றுக்குட்டி இறந்து கிடந்தது.

Update: 2022-01-11 20:46 GMT
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. இந்நிலையில் சீகம்பட்டி என்ற பகுதியில் சுமார் 1 வயது மதிக்கத்தக்க காட்டெருமை கன்றுக்குட்டி ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட கன்றுக்குட்டி வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. கன்றுக்குட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துவரங்குறிச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சமீப காலமாக காட்டெருமைகளின் இறப்பு என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருவது சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்