திட்டக்குடி அருகே லேப்டாப், செல்போன் திருடிய சிறுவன் கைது

திட்டக்குடி அருகே லேப்டாப், செல்போன் திருடிய சிறுவனை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2022-01-12 17:04 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடியை அடுத்த  கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இந்திராகாந்தி (வயது 42). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின்  வராண்டாவில் மகன் ராஜசேகரின் லேப்டாப் மற்றும் செல்போனை வைத்துவிட்டு, கூடலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்த போது அவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து இந்திராகாந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருடு போன செல்போன் எண்ணை பயன்படுத்தி மர்ம நபரை தேடி வந்தனர்.

அதில்,  கொட்டாரம்  காலனியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் தான் லேப்டாப், செல்போனை திருடி சென்று பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவரை பண்ருட்டியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்