அரசு பஸ் மீது சரக்கு வாகனம் மோதி 6 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே அரசு பஸ் மீது சரக்கு வாகனம் மோதி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-01-12 17:52 GMT
சாத்தூர், 
சாத்தூர் தாலுகா மேட்டமலை அருகில் சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது மேட்டமலை அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் பஸ் மீது மோதியதில் பஸ்சில் பயணம் செய்த ராமமூர்த்தி (வயது 25), சுப்புராஜ் (24), மணிராம் (30), முகமது பைசல் (23), அருள்ராஜ் (22), ராகுல்பிரன்னா (29) ஆகியோர் படு காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பஸ்சில் பயணம் செய்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்