மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-01-12 18:13 GMT
குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் திண்டுக்கல்-நத்தம் சாலையில், பொன்னகரம் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமானப்பணியில் வேலை செய்து வந்தார். 

நேற்று காலை இவர், கட்டிட பணியில் ஈடுபடுவதற்காக இரும்பு ஷட்டரை திறந்தார். அப்போது மின்கம்பி உரசியதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து முகமது ரபீக் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முகமது ரபீக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்