வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கூறியதாவது
கொரோனா மற்றும் ஒமைக்கிரான் நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசால் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் காங்கேயம் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு 30 2 காவல் சட்டம் செயல்முறை ஆணை நடைமுறையில் இருப்பதாலும் இன்றுவெள்ளிக்கிழமை முதல் 18 ந்தேதி வரை தைப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி நடத்தும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.