கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

Update: 2022-01-13 14:43 GMT
வேலூர்

வேலூர் ரங்காபுரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்