ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா

Update: 2022-01-13 17:54 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 
நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 477 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதுவரை ஆஸ்பத்திரிகளில் 1,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்