மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-01-13 18:06 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்று 38 என்று இருந்த நிலையில் நேற்று 76 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 603 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்தது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 420 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்