மது விற்ற பெண் கைது

களக்காட்டில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-13 21:33 GMT
களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் கீழதேவநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணி மனைவி லட்சுமி (வயது 55) என்பவர் வெள்ளை நிற சாக்கு பையில் மறைத்து வைத்து, அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லட்சுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்