சாராயம் கடத்திய 4 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-15 15:28 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.  
வாகன சோதனை
 கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை கீழ்வேளூர் அருகே காக்கழனி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை  நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை  நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகை பாப்பா கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் விக்னேஷ் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ஜோதிபாசு (21), என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 
4 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல தேவூர் கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி  வந்தநாகை, அந்தனப்பேட்டை கடைத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் மணிகண்டன் (20). சிக்கல் ெரயிலடி தெருவை சேர்ந்த பகுருதீன் மகன் முகமது ரபீக் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்