பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை சுத்தமல்லியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-15 19:10 GMT
பேட்டை:
நெல்லை சுத்தமல்லியை அடுத்த கோடகநல்லூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி மகள் அனுராதா (வயது 23). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ெரட் திரேஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அனுராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்