திருப்புவனம்,
திருப்புவனம் வைகை ஆற்றுக்குள் உள்ள படுகை அணையின் மேல்புறம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் போர்வெல் கிணறு அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து டி.நெல்முடிகரை குரூப் கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வன் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம் வைகை ஆற்றுக்குள் உள்ள படுகை அணையின் மேல்புறம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் போர்வெல் கிணறு அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து டி.நெல்முடிகரை குரூப் கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வன் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.