அரியலூரில் 73 பேருக்கு கொரோனா

அரியலூரில் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-01-16 18:00 GMT
அரியலூர், 
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 71 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 73 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 43 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 13 பேரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 548 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 314 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்