மதுரை
விவசாயத்தை காக்க கடவுளே களத்தில் இறங்கி நெற்கதிரை அறுவடை செய்ததை நினைவு கூரும் வகையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தை தெப்பத் திருவிழாவில் கதிர் அறுப்பு வைபவம் நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை நெற்கதிர்களுடன் காட்சியளித்தனர்.