மேலும் 280 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-01-18 20:15 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 49,618 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 46,908 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 189 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,160 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

மேலும் செய்திகள்