புதுச்சேரியில் இன்று 1,849 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

புதுச்சேரியில் தற்போது 11,344 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-19 13:51 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,896 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 895 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,319 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 11,344 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்