ஈரோடு ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

Update: 2022-01-19 15:03 GMT
ஈரோடு மாவட்டத்தில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனங்களில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், வட மாநிலத்தவர்கள் கடந்த 13-ந்தேதி குடும்பத்தினருடன் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு கிளம்பி சென்றனர். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்ததையொட்டி நேற்று முன்தினம் முதல் வட மாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஈரோட்டுக்கு வர தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்