மதுரை,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 21). இவருக்கும், மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்தநிலையில் அர்ச்சனாவின் திருமணம் தடைபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அர்ச்சனா, திருச்சியில் இருந்து கடந்த 12-ந் தேதி, மணிகண்டன் வீட்டிற்கு சென்று, அங்கேயே விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அர்ச்சனாவின் தாய் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
======
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 21). இவருக்கும், மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்தநிலையில் அர்ச்சனாவின் திருமணம் தடைபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அர்ச்சனா, திருச்சியில் இருந்து கடந்த 12-ந் தேதி, மணிகண்டன் வீட்டிற்கு சென்று, அங்கேயே விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அர்ச்சனாவின் தாய் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
======