வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Update: 2022-01-19 17:06 GMT
மதுரை,
மதுரை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆசாத் (வயது 31). சம்பவத்தன்று இவர், புதூர் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கருப்பசாமிபாண்டி, லாரன்ஸ், கார்த்திக் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ஆசாத்திடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இதுபோல், அண்ணாநகர் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 15 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
======

மேலும் செய்திகள்