அரியலூரில் 88 பேர் கொரோனாவால் பாதிப்பு

அரியலூரில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

Update: 2022-01-19 19:41 GMT
அரியலூர் 
அரியலூர் மாவட்டத்தில் 88 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 29 பேர் குணமடைந்ததால் அவர்கள் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது மாவட்டத்தில் 479 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,224 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

மேலும் செய்திகள்