3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 3-வது தவணை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2-வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதம் நிறைவடைந்தவர்கள், 3-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையவர்களாவர். எனவே இன்று அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.