புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது..!

புதுச்சேரியில் தற்போது 13,053 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-20 11:21 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,849 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,342 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 13,053 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்