கட்டிட தொழிலாளி தற்கொலை

வேடசந்தூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-20 16:58 GMT
வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள தொன்னிக்கல்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அருண்குமார் (வயது 23). கட்டிட தொழிலாளி. இந்நிலையில் நேற்று ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் அருண்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றினர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்