2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு

கமுதியில் 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-01-20 18:34 GMT
கமுதி,

கமுதி வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானவரம். இவருடைய மனைவி சோலையம்மாள் (வயது 65).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோலையம்மாள் தனது வீட்டின் வெளியே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பாலமுருகன், திடீரென்று சோலையம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டினார். இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த குமரையா என்பவரின் மனைவி குப்பம்மாளையும்(80) அரிவாளால் வெட்டி விட்டு பாலமுருகன் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த 2 பெண்களையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்