புதுச்சேரியில் இன்று 2,528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

புதுச்சேரியில் தற்போது 14,122 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-21 10:05 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 1,985 பேர், காரைக்காலில் 411 பேர், ஏனாமில் 105 பேர், மாஹேவில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 14,122 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்