சென்னை விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை சோதனை செய்ய தனி பாதை

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை சோதனை செய்ய தனி பாதை அமைக்கப்பட்டது.

Update: 2022-01-21 11:23 GMT
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏற காத்திருக்கும் போது, விமானத்தில் ஏற்ற எடுத்து செல்லப்படும் அவர்களது உடமைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் மீண்டும் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு சம்பந்தப்பட்ட பயணி வரவேண்டும். இதனால் காலதாமதம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் அவற்றை சோதனை செய்ய தனி பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையை சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தொடங்கி வைத்தார். 

இதன்மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ள உடமைகளை மறுபரிசோதனை செய்ய உரிய பயணி விரைவாக வந்து சோதனையை முடித்துக்கொண்டு மீண்டும் விமானத்தில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்