புதுச்சேரியில் இன்று 2,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,497 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Update: 2022-01-22 16:02 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,316 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 3 பேர் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,901 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,497 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,33,347 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்