229 பேருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 22 ஆயிரத்து 711 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று சிகிச்சை முடிந்து 138 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 21 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 206 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
முதியவர் பலி
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 52 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளது.