இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-22 19:03 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ராஜேசுவரி (வயது 28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் ராஜேஸ்வரி வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் விரைந்து சென்று, ராஜேசுவரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 ஆண்டுகளில் ராஜேசுவரி தற்கொலை செய்ததால், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்