மோட்டார் சைக்கிள் திருட்டு
வள்ளியூரில் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.
வள்ளியூர்:
வள்ளியூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 41). இவர் வள்ளியூரில் கெமிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவில் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை நைசாக திருடிச் சென்றார். மறுநாள் காலையில் ஜெயபால் தனது மோட்டார் சைக்கிள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.