கொத்தனாருக்கு இரும்பு கம்பி அடி; வாலிபர் கைது

நெல்லை அருகே கொத்தனாரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-22 19:40 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள பிராஞ்சேரியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (26). இவர்கள் 2 பேரும் சிவகாசியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கந்தசாமி, மாரியப்பனுக்கு ரூ.11 ஆயிரம் சம்பள பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் மாரியப்பன் தனது வீட்டு முன்பு வைத்து கந்தசாமியிடம் சம்பள பாக்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மாரியப்பனை அவதூறாகப் பேசி, கீழே கிடந்த கம்பியை எடுத்து தலையில் அடித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாரியப்பன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் துரை விசாரணை நடத்தி கந்தசாமியை நேற்று கைது செய்தார்.

மேலும் செய்திகள்