வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது

பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-22 20:05 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் தெற்கு மாலைசூடிபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் மாரிமுத்துவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாவூர்சத்திரம் வெய்க்காலிப்பட்டி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் பூக்கட்டும் தொழிலாளியான பத்மநாதன் என்ற சரவணன் (வயது 28) நகை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டனர்.

மேலும் செய்திகள்