கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இறந்தார்.

Update: 2022-01-22 20:12 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அப்துல் ரசாக் (வயது 78). இவருக்கு நேற்று காலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அப்துல் ரசாக் இறுதிச்சடங்கு நேற்று பகலில் அவரது சொந்த ஊரான கடையநல்லூர் அருகே உள்ள வடகரை கிராமத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமுரளி, பழனிநாடார், ராஜா உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர்.
அப்துல் ரசாக் 1977-1980 வரை கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மறைந்த அப்துல் ரசாக்கிற்கு அமத்துல் ரகுமான் என்ற மனைவியும், ரஜப் முகம்மது, செரிப் ஆகிய மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்