நர்சிங் மாணவி தற்கொலை

நர்சிங் மாணவி தற்கொலை

Update: 2022-01-22 20:51 GMT
மதுரை
உசிலம்பட்டி மேலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ராஜநர்மதா(வயது 23). இவர் கீழவாசல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று அறையில் யாருமில்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விளக்குத்தூண் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த மாணவி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்