திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,069 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2022-01-23 14:50 GMT
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரே நாளில் 1,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 405-ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 8,276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் பலியாகி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,892 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்