பண்ருட்டி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
பண்ருட்டி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் புதுபிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36). லாரி டிரைவர். இவருக்கும் பணிக்கன்குப்பத்தை சேர்ந்த எஸ்தர்சந்தியா என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எஸ்தர்சந்தியா பணிக்கன்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் மோகன்ராஜ் மட்டும் தனிமையில் வசித்து வந்தார்.
தற்கொலை
இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வருமாறு மனைவியை மோகன்ராஜ் அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி அவரது தந்தை ராமலிங்கம் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.