வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

Update: 2022-01-23 18:06 GMT
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள ஆவிணிப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பிரவீன் (வயது 21). இவரது குடும்பபிரச்சினை காரணமாக மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆவிணிப்பட்டி காயாங்கண்மாய் பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் பிரவீன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்