அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது

சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-23 19:42 GMT
சிவகாசி,
சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டில் மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருக்கும் ஒரு முள்வேலி அருகில் எவ்வித அரசு அனுமதியோ, உரிமம் இன்றி ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள முழுமையாக தயாரிக்கப்படாத பிஜிலி வெடிகள்  2 அட்டை பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் (வயது 31), பால்ராஜ் (45) ஆகிய 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்