ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 524 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 524 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டனர். இதுவரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.