வேலூரில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி

வேலூரில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலியானான்.

Update: 2022-01-24 18:16 GMT
வேலூர்

வேலூர் கஸ்பா சாஸ்திரிநகர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவருக்கு 2 மகன்கள் உண்டு. 2-வது மகன் பரத் (வயது 10). அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சதுப்பேரி அருகே உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றான். கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென பரத் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த சக நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தேடிப்பார்த்தனர்.

மேலும் இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பரத்தை தேடினர். நீண்ட நேரத்துக்கு பின்னர் பரத்தை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரியூர் போலீசார் மாணவனின் பிணத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்