ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 110 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.