மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-25 19:20 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துவாஞ்சேரி- தூத்தூர் சாலையில் 2 மாட்டு வண்டிகளில் வந்தவர்களை மறித்து சோதனை செய்தனர். இதில் அந்த மாட்டு வண்டிகளில் முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளில் இருந்து சாத்தம்பாடி பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சாத்தம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த முருகேசன்(வயது 45), ராஜா(37) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்