ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-25 19:22 GMT
விருதுநகர், 
விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு 73 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மண்டல பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல கவுரவ தலைவர் கெங்குராஜ், துணைப் பொதுச் செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்