மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி

விருதுநகரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-25 19:54 GMT
விருதுநகர், 
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் விருதுநகரில் வீரவணக்க நாளை முன்னிட்டு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நகர் பழைய பஸ் நிலையம் அருகே இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
அதேபோல எதிர்கோட்டையில் உள்ள வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்