வடமாநில வாலிபர் கைது

தங்க நகையை அபகரித்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-26 17:11 GMT
ராமேசுவரம், 
பாம்பன் பாரதியார் நகர் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரி. இவரிடம் அந்த பகுதிக்கு வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் தங்க நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி 4 பவுன்தங்க நகையை பெற்று பாலிஷ்செய்து உள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அந்த பெண் தங்க நகையை வாங்கி பார்த்ததில் எடை குறைவாக இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர் சத்தமிடவே அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடி பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த குமார்ராம் என்பதும் தப்பி ஓடிய நபர் பிபின்குமார் என்பதும் தெரியவந்தது. இது குறித்து பாம்பன் போலீசார் பிடிபட்ட பீகாரை சேர்ந்த இளைஞரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்