திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி பேனர்கள், சின்னங்களை அகற்ற கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி பேனர்கள், சின்னங்களை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், நாடட்றம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந்் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக வந்தது.
எனவே மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 5 கிலோமீட்டர் பரப்பளவிற்கு அரசியல் கட்சி சார்ந்த விளம்பர பேனர்கள், கட்சி சின்னங்களை உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.