விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-01-26 19:13 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள பழையவேலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மொட்டையன் (வயது 85). நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த 2 நாட்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில், அவதிப்பட்ட அவர், நேற்று காலை விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது மகள் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மொட்டையன் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்