கரூரில் 209 பேருக்கு கொரோனா

கரூரில் 209 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-01-26 20:07 GMT
கரூர், 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 169 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,490 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்